மரங்களின் மனித நேயத்தையும் மனிதர்களின் இயற்கை நேயத்தையும் இணைத்துச் சொல்லும் இக்கதைகள் இளையோருக்கு ஓர் அரிய புதையல் !
கிறித்தவத்தின் சிறப்பினைப் திருவிவிலியம், வரலாறு, திருஅவை ஆகிய முப்பெரும் ஊற்றுப் பெருக்குகளிலிருந்து சாறு பிழிந்து தருகிறது இந்நூல்.
திருவிலியத்தின் திருப்பாடல்களை இறையியலாக்கம் செய்ய விரும்புவோருக்கும் இலக்கியச் சுவைஞர்களுக்கும் இந்நூல் ஒரு புதையல்.
50 புனிதர்களின் வரலாறு, தொடர்புடைய சிந்தனைகள், நற்செய்தி வாசகங்கள், பரிந்துரை வேண்டல்கள், மன்றாட்டுகள் அமைந்துள்ள ஒரு குடும்ப - குழும- வழிபாட்டுக் கையேடு.
‘கிராம உலகம்’ (Global Village) என்பதைத் தாண்டி, உள்ளங்கைக்குள் இருக்கும் அலைபேசி உள்ளிட்ட ஊடக உலகம் குறித்துச் சிந்திக்க இது தூண்டுகோலாக அமையும் .
With a presentation of various perspectives on Indian philosophy, Indian modern thinkers, religious formation and religious life, the anthology in this book proves the unique characteristic feature of Indian plural traditions.
இல்லற மற்றும் துறவற வாழ்வுக்கான அர்ப்பணத்தின் பல்வேறு பரிமாணங்களை கிறித்தவ ஆன்மிகத்திலிருந்தும், திருவிவிலிய ஒளியிலிருந்தும், நடைமுறை எடுத்துக்காட்டுகளிலிருந்தும், பகுப்பாய்வுச் சிந்தனைகளிலிருந்தும் தருகிறது இந்நூல்.
கடல்மீது நடந்து இயேசு, அவரைப் போல நடக்க முயன்று நம்பிக்கைத் தளர்ச்சியால் தடுமாறும் பேதுரு என நாம் அறிந்த திருவிலிய நிகழ்வில் நம்மையும் பங்கேற்க அழைத்து, இன்றை சூழலுக்கேற்ப அதை இறையியலாக்கம் செய்கிறது இந்நூல்.
இந்நூலின் பல கட்டுரைகள் கிறித்தவ ஆன்மிகத்தின் இலக்கையும் போக்கையும் தெளிவுபடுத்திக்கொண்டே பயணிக்கின்றன. மறையுரைகளில், தியானங்களில், கருத்தமர்வுகளில், பயிற்சிப் பாசறைகளில் பயன்படுத்தவும், வாசித்துப் பயன்பெறவும் இந்நூல் வழிவகுக்கிறது.
‘முன்னேற்றச் சிந்தனையூட்டும்’, ‘முன்னேற்றப் பாதை காட்டும்’, ‘முன்னேற்ற மன வளமூட்டும்’ என்ற இலக்குகளை இந்நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவற்றை ஒவ்வொன்றாக வாசித்து, ரசித்து, சுவைத்து, முத்தாய்ப்புச் சிந்தனைகளை அசைபோட்டு உள்வாங்கினால், நாமும் பிறருக்குக் கதைசொல்லிகளாக மாறலாம்.
ஆனந்தம் என்பது நீடித்திருப்பது, நிலைத்திருப்பது பொருளுள்ளது, ஊக்கமளிப்பது ! இந்த ஆனந்தத்தைப் பற்றிக்கொள்வதற்கான வழிமுறைகளை 27 தலைப்புகளில் வழங்கியிருக்கிறது இந்நூல்.
சிகாகோ - லொயோலா அச்சகம் வெளியிட்டுள்ள Dear Pope Francis என்ற இந்நூலின் தமிழாக்கம் இது. உலகெங்கும் உள்ள 26 நாடுகளிலிருந்தும் 14 மொழிகளிலிருந்தும் குழந்தைகள் அனுப்பிய கேள்விகளுக்குத் திருத்தந்தை பதிலளித்துள்ளார். உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு நாடுகளில் இந்நூல் வெளியிடப்பட்டு வருகிறது.
கிறித்தவம் என்ற எல்லையைத் தாண்டி மானுட நேசர்கள் யாவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் இயேசுவை அவர் காட்டியிருப்பது வெகுவாகப் பாராட்டத் தக்கது !
கி.மு. 1800 முதல் கி.பி. 2015 வரை, கானான் நாடு முதல் இன்றைய பாலஸ்தீனம் வரை இஸ்ரயேல் இனம் குறித்த தகவல்களை எட்டு தலைப்புகளில் சுவைபடத் தொகுத்துள்ளது இந்நூல்.
This book highlights the precious moments of encounter with ordinary fellow human beings and draw extraordinary inspiration with long lasting impact.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium