தூங்கி கொண்டிருப்பவரை நல்வாய்ப்பு தட்டி எழுப்புவதில்லை. உழைப்பும் முயற்சியுமே இந்த மானுடத்தை இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. இதைத்தான் முயன்றால் முடியும் என்ற சிற்றேடு தலைப்பாகவும் உள்ளடக்கமாகவும் கொண்டுள்ளது.
உலக அளவில் நமக்கு முன்பாக வாழ்ந்து சாதித்தவர்கள் பல்வேறு வெற்றி சூத்திரங்களை நிகழ்வுகளாக, கதைகளாக, வரலாறாக தொகுத்து தந்துள்ளது இந்நூல்.
பல்துறைச் செய்திகள் அடங்கியுள்ள இந்நூலில் இதுவரைப் படித்திராத பல்வேறு பொதுஅறிவு தகவல்கள் அடங்கியுள்ளன. இந்நூலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் படிப்போருக்கும் மாணவர்களுக்கும் போட்டித்தேர்வுக்கு தயாராவோருக்கும் பயன்படும் வகையில் அமையும்.
சுற்றுப்புறங்களில் தென்படும் உயிரினங்களையும் பயன்படுத்தும் பொருள்களையும் இயற்கையின் சில கூறுகளையும் கதாப்பாத்திரங்களாக்கி நம்மையும் நம் சமூகத்தையும் நநாம் நெறிபடுத்திக்கொள்ள உவமைக் கதைகளை படைத்து அவற்றின் வழியாக நன்னெறி சிந்தனைகளை தாங்கி வந்திருக்கும் நூல்தான் கற்றுத்தரும் சுற்றுப்புறம்.
பழைமையோ புதுமையோ அந்தக் காலமோ இந்தக் காலமோ அன்பென்ற அச்சாணியில்தான் மானுடம் இயங்க முடியும் என்பதை உரத்துச் சொல்கிறது அன்பென்ற மழையிலே என்ற இந்நூல்.
ஐக்கிய நாடுகள் அவை பல்வேறு விழாக்களை ஆண்டுதோறும் கொண்டாடும் வகையில் அறிமுகப்படுத்திவருகின்றன. இவற்றை கண்டும் காணாமலும் கேட்டும் கேட்காமலும் பலரும் கடந்து செல்வது வழக்கம். இதற்கு முதன்மையான காரணம் என்னவென்றால் இந்த நாள்களின் சிறப்பை நாம் அறிந்துகொள்ள அதிகம் முயற்சி எடுப்பதில்லை. இந்த முயற்சிக்கு முதல் புள்ளியாக கொண்டாடுவோம் என்ற இந்நூல் அமைந்துள்ளது.
நாம் மறந்துபோன மண்சார்ந்த விளையாட்டுகளை நினைவுபடுத்தி இளையோரை திசைவழிபடுத்தும் சிந்தனைகளை உள்ளடக்கி அவற்றை சிறார்களுக்கான சிறுகதைகளாக தந்து அறம் செய்து விளையாடு என்று அழைப்பு விடுக்கிறார் நூலாசிரியர்.
திருஅவையின் எதிர்கால தூண்களாய் விளங்கும் இளையோரை இலக்காக கொண்டு திருவிவிலிய விழுமியங்களை உள்ளீடாக்கி தனது நீண்டகால ஊடகப்பணி சமுகப்பணி அனுபவங்களில் தோய்ந்து இறையாட்சி இலட்சியத்தை முன்னிறுத்தி சமூக அக்கறையோடு அமைந்திருக்கிறது இந்நூல்.
உடல் வலிமையாக இருந்தாலும் மனம் என்னவோ மெல்லிய மலர்போலத்தான். அதன் இயல்பை புரிந்துகொண்டு நம்மை நாமே மேலாண்மை செய்வதற்கான தேவை அதிகரித்திருக்கிறது. அதற்கு உதவும் நல்ல நூல்தான் மன அழுத்தத்தை வெல்ல.
இளையோருக்கான இனிகோ என்ற இந்தப் படைப்பின் வழியாக அவரது வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அர்த்தமுள்ள விதத்தில் வரலாற்றுப் பதிவுகளாக, அறிய படங்களை ஆற்றொழுக்காக தந்து இளையோருக்கு ஏற்ற வண்ணம் தந்திருக்கிறார் இந்நூலாசிரியர்
ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் இலட்சியம் மிகவும் அவசியம். இலட்சியமில்லா வாழ்க்கையும்,பயணமும் கடிவாளம் இல்லாத குதிரைப் போன்றவை. நமக்கான இலக்கு குறித்து சிந்திக்கவும் இலட்சியங்களை சுவாசிக்கவும் இந்நூலின் வழியாக அழைப்பு விடுத்துள்ளார் ஆசிரியர்.
ஏழு அருளடையாளங்களின் வரலாறு, உள்பொருள், திருவிவிலியப் பின்புலம், இறையியல் பார்வை, நடைமுறைச் சவால்கள், பயணிக்க வேண்டிய இலக்குகள் என்று பல அம்சங்களைத் தாங்கி வந்திருக்கிறது இந்நூல்.
மறைசாட்சியார், நம்பிக்கை சாட்சியார், மறைவல்லுனர்கள், தவமுனிவர்கள், அறப்பணி ஆற்றியோர், ஐந்து காயம் வரம் பெற்றோர், திருவுடல் அழியாதோர், இளம் புனிதர்கள் என்று வற்றாத நீரூற்று போல பொங்கி வழியும் புனிதர்களின் கருவூலத்தை வியக்கத்தக்க நூறு தகவல்களாக தந்திருக்கிறார் ஆசிரியர்.
என்னதான் திருவிவிலியம் வாசித்து மறையுரை கேட்டு, தியானங்களில் பங்கேற்று இறைவேண்டலில் நேரம் செலவழித்தாலும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் நேர்மையான தன்னாய்வு இல்லையெனில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. அத்தகைய மாற்றம் நிகழ வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு நிகழ்வுகளை முன்னிறுத்தி சில கேள்விகளை எழுப்பி சில சிந்தனைகளை முன்வைத்து அருள்வாக்கு ஒளியில் நம்மை புதுப்பித்துக்கொள்ள அழைப்பு விடுக்கிறது இந்நூல்.
வரலாற்று நிகழ்விகள் கற்றுத்தரும் பாடங்கள் விலைமதிப்பற்ற கருவூலமாக திகழ்கின்றன. அனைத்து வரலாறுகளையும் அனைவரும் கற்றுத்தேர்வது என்பது இயலாத செயல். எனவேதான் ஒருவருக்கொருவர் தெரிந்த வாழ்க்கை பாடங்களை பிறரோடு பகிர்ந்து கொள்கிறோம். வளரும் இளைய தலைமுறைக்கு இதைவிட பெரிய வரலாற்றுப் பரிசு வேறு எதுவாக இருக்க முடியும்.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium