திருவழிபாட்டிற்கு உதவும் வகையில் கடந்த மாபெரும் யூபிலி ஆண்டில் புத்தாயிரம் மலர்கள் என்ற பாடல்தொகுப்பு வெளியிடப்பட்டது. அதன் திருத்தப்பட்ட வடிவமாக ஆனந்த ராகம் பல பதிப்புகளாக வெளியானது. இப்போது சற்றே பெரிய வடிவில் பல புதிய, பழைய பாடல்களை உள்ளடக்கி, புதிய வடிவத்தில் இப்பாடல் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
“முயற்சி என்பது விதை போல அதை விதைத்துக்கொண்டே இரு முளைத்தால் மரம் இல்லையென்றால் அது மண்ணிற்கு உரம்” என்ற தம் சிந்தனைக்கேற்ப இயற்கை விவசாயச் சிந்தனைகளை விதைத்துக்கொண்டே வாழ்ந்தவர் நம்மாழ்வார் அவர்கள். அவர் மறைந்தாலும் விதைகள் விழித்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர் ஆற்றிய பேருரை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் வளர்த்தெடுக்கும் வார்த்தைகள், வாசகங்கள் நூலெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. விரைவாக வளரும் நமது சமுதாயத்தில் இளைஞர்கள் துடிப்போடு பங்கேற்க வளரவேண்டும்! உலகை வெல்ல வேண்டுமானால் நாம் நம்மையே வென்றாகவேண்டும். அதற்கான வழிகாட்டியாக இந்த நூல் அமைந்துள்ளது.
அருமையான அறிவான விடுகதைகளை இன்றைய குழந்தைகளுக்குத் தம் ஆசிரியப் பணியின் அனுபவத்தின் வாயிலாக தொகுத்து வழங்கியுள்ளார் ஆசிரியர்.
தனிமனிதருக்கான வழிகாட்டல், ஆளுமை வளர்ச்சி, திசைவழியாக்கம், பிறர்நல எண்ணம், சமூகம் குறித்த அக்கறை என்று பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய இந்நூல் தனிமனிதரையும் சமூகத்தையும் நெறிப்படுத்துவதற்கு ஒரு சிறந்த வழிமுறை !
அன்பே சமய வாழ்வின் பாதையென்று, நல்லதொரு வழிகாட்டி அமைந்துவிட்டால் எத்தகு பாதையையும் எளிதில் கடந்திடலாம். அத்தகு வகையில் நம் கையைத் தேடிவந்த நம்பிக்கைப் பயணத்தின் நல்லதோர் வழிகாட்டி இந்நூல்.
“அமைதியில் கனிவது செபம், செபத்தில் கனிவது விசுவாசம், விசுவாசத்தில் கனிவது அன்பு, அன்பில் கனிவது இறைப்பணி, இறைப்பணியில் கனிவது அமைதியும் சமாதானமும்” என்ற அன்னை தெரசாவின் வாக்கிற்கேற்ப இந்நூலில் உள்ள மன்றாட்டுகளைச் செபித்து வாழ்வில் வளமடைவோம்.
தீண்டாமையை வகைபிரித்துக் கொண்டாடும் சமூகத்தில் விளிம்புநிலை மக்களைத் தொட்டு அரவணைத்தார் அன்னை ! எந்த வள்ளலாலும் செய்ய முடியாத ஈகை இதுவல்லவா? அன்னை தெரசாவை வணங்கிச் செல்வதற்கும், மேற்கோள் காட்டுவதற்கும் அல்ல, அவரைப்போல் வாழ்ந்துகாட்ட சவால்விடுக்கிறது இந்நூல்.
நமக்குள்ளும் நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களுக்குள்ளும் ஓர் இறையாற்றல் செயலாற்றுகிறது என்ற செய்தியை நமது அன்றாட வாழ்வில் உறுதிப்படுத்தும் ஆன்மிக நூல் இது.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium