பல்வேறு உளவியல் கோட்பாடுகளை எளிய எடுத்துக்காட்டுகளோடு சமூக அக்கறையோடு, ஆற்றுப்படுத்தும் பாங்கோடு, அனுபவ முதிர்ச்சியோடு முன்வைத்து, அகத் தேடலுக்குத் தூண்டும் நூல்.
இளைய சமுதாயம் சிறகடித்து, இமயத்தைச் சிறைபிடிக்கத் தேவையான பல நல்ல கருத்துகளையும், நிகழ்வுகளையும், சிந்தனைகளையும் முறையாகச் செம்மைப்படுத்தித் தருகிறது இந்நூல்.
நம்முடைய வாழ்வை நிதானமாகவும், வளமையாகவும், மகிழ்ச்சியாகவும், நோயின்றியும் அமைத்துக்கொள்ள சிரிப்பு அவசியம். அதன் முக்கியத்துவத்தையும் மருத்துவப்பலனையும் தெளிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.
“சாதனைகள் படைக்க வேண்டும் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும்” என்ற ஆவல் அனைவருக்கும் உண்டு. உலகில் மனித குலம் இன்னும் சாதிக்க வேண்டிய சாதனைகள் ஏராளம் இருக்கிறது. புதிய துறைகளில், புதிய சாதனையாளர்கள் உருவாக இந்நூல் ஓர் உந்துசக்தியாகும்.
நிலமும் நீரும் வளியும் வெளியும் மாசுபடுத்தப்பட்டு உயிர்கள் வாழ முடியாத பூமியாக மாறிக் கொண்டிருப்பதையும், பூமியின் வேதனைகளையும் சோதனைகளையும் விறுவிறுப்பாகக் கூறுகின்றது இந்நூல்.
இயற்கையைச் சரியாக புரிந்துகொள்ளாத நிலையே பல பேரழிவுகளுக்குக் காரணம் இயற்கையின் ஆழப் பரிமாணத்தைப் புரிந்துகொள்ள பல அற்புதமான செய்திகளை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது.
பெருமூச்சு விடுவதே வாழ்வின் நிறைவாகக் கருதும் மனிதர்களுக்கு நேசத்தை நிறைவாகப் பார்க்க ஓர் அழைப்பு இது. சில வரலாற்று உண்மைகள், நேரடி அனுபவங்கள், இறையியல் விளக்கங்கள், சில கேள்விகளுக்கான பதில்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, ஒவ்வொரு தலைப்பின் கீழும் சிந்தனைக்குச் சில வரிகளும் உணர்வுபூர்மான இறைவேண்டல்களும் அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பு.
எளிய நடை, இனிய சொற்கள், சுகமான அனுபவங்கள், சுவையான கதைகள், பொருத்தமான மேற்கோள்கள் போன்றவை இந்நூலின் சிறப்பு. இந்நூலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் கருத்துரையாளர்கள் பயன்படுத்தலாம். இதிலுள்ள கருத்துகளைப் பல முறை படித்து அதனை உள்வாங்கித் தாங்களும் பிறரும் வளரலாம். இது ஒரு தகவல் களஞ்சியம் மட்டுமன்று; மாறாக, வாழ்க்கைக் களஞ்சியம். எனவே நமது வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்திட சின்னச் சின்ன சிந்தனைகளை உற்சாகத்துடன் படித்து மகிழ்வோம்.
மண்ணுக்கும் மனிதருக்கும் இடையேயான தொடர்பையும், மண்ணைச் சீரழிக்காமல் மண்ணில் வளர்சின்ற செடி கொடி, மரங்கள் காடுகளை மதித்துக் காக்க வேண்டும் என்பதையும் தெளிவாக இந்நூலில் எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.
எவ்வாறு ஆகாயம் அசுத்தமாகிறது என்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் அறிவியல்பூர்வமாக இந்நூலில் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
தண்ணீரின் அவசியத்தையும், நாகரிகத்தை வளர்த்த நதிகள் இன்று நஞ்சைச் சுமக்கும் நதிகளாக மாறி வருவதையும் மற்றும் அவை எவ்வாறு மாசுபடுத்தப்படுகின்றன என்பதையும் தெளிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.
Nil
மனிதரின் வாழ்வில் வருகின்ற பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டுமென்றால் தீர்க்கமான சிந்தனையும், உறுதியான மனநிலையும் அவசியமானது. நற்சிந்தனைகளால் நிரம்பியிருக்கும் மனிதன் மனச்சிதைவுக்கும் மனவிரக்திக்கும் எளிதில் ஆளாவதில்லை. இந்நூலில் உள்ள சிந்தனைகள் நம் உள்ள வளர்ச்சிக்கு மட்டுமல்ல, நம் ஆன்மிக மலர்ச்சிக்கும் உதவும் என்பதில் ஐயமில்லை.
This is a course book for students who are in need of Basic English for day-to-day use. The emphasis on interaction and creative thinking through activities would help teachers engage their students meaningfully in language classrooms.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட கிறித்தவச் சமூகத்தின் பங்களிப்பைத் துணிச்சலாக, ஆய்வுபூர்வமாக மீட்டெடுத்திருக்கிறது இந்நூல்.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium